ஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்கும் தென்னிந்திய இயக்குனர்! அட்லி அதிர்ச்சி?

வியாழன், 12 டிசம்பர் 2019 (22:49 IST)
விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி அடுத்ததாக ஷாருக்கான் நடிக்கவிருக்கும் ஹிந்தி படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பம் ஆகிவிட்டதாகவும் செய்திகள் வெளியானதே
 
ஆனால் ஷாருக்கானின் அடுத்த படத்தை பிரபல மலையாள இரட்டை இயக்குனர்கள் இயக்கவிருப்பதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. ஆஷிக் அபு, ஷ்யாம் புஷ்கரன் என்ற இரட்டையர்கள் ஏற்கனவே வைரஸ், மகாநதி ஆகிய படங்களை மலையாளத்தில் இயக்கியுள்ளனர். இந்த இரட்டையர்கள் தற்போது ஷாருக்கான் படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அடுத்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
 
ஷாருக்கான்-மலையாள இயக்குநர்கள் இணைந்து உருவாகும் படத்தின் தகவல் அட்லீ தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. பிகில்’ திரைப்படம் ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக செய்திகள் வெளிவந்தாலும் அட்லிக்கு இன்னும் அடுத்த படம் ஒப்பந்தம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்