இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் !! - 15/09/2020

செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (04:30 IST)
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து  கொள்ளலாம்.
 
1. மேஷம்:
 
இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. வேண்டிய வரை பிரிய வேண்டி இருக்கும். மற்றவர்களுக்கு வலிய சென்று உதவுவதால் வீண் விரோதம் உண்டாகும்.
 
2. ரிஷபம்:
 
இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும். பணியாளர்களிடம்  நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
 
3. மிதுனம்:
 
இன்று மிதுன ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் சில இன்னல்கள் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகலாம். வாழ்க்கை  துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.
 
4. கடகம்:
 
இன்று கடக ராசிக்காரர்களுக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு  கூடும்.
 
5. விருச்சிகம்:
 
இன்று விருச்சிக ராசிக்காரர்களுக்கு முன் கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது பிரச்சனைகள் வராமல் தடுக்கும். மாணவர்கள் மிகவும் கவனத்துடன்  பாடங்களை படிப்பது நல்லது.
 
6. தனுசு:
 
இன்று தனுசு ராசிக்காரர்களுக்கு எதிலும் பயம் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் ஏற்படும். சங்கடமான சூழ்நிலையை சந்திக்க  வேண்டி இருக்கும். 
 
7. மகரம்:
 
இன்று மகர ராசிக்காரர்களுக்கு தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் குழப்பத்திற்கு  ஆளாக வேண்டி இருக்கும்.
 
8. கும்பம்:
 
இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சனை குழப்பம் போன்றவை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளிடம் பேசும்போது எச்சரிக்கை தேவை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்